திரிணாமுலில் மாயமானது காங்கிரஸ்

தினகரன்  தினகரன்
திரிணாமுலில் மாயமானது காங்கிரஸ்

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது லோகோவிலிருந்து காங்கிரஸ் பெயரை நீக்கிவிட்டது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 1998ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஏற்படுத்தினார். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோகோவில் காங்கிரஸ் என்ற பெயரை காணவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து 21 ஆண்டுகள் ஆனதால், காங்கிரஸ் அடையாளம் தேவையில்லை. மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என திரிணாமுல் முடிவு செய்துள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை