ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
அதிமுக சார்பில் தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்ய விரைவில் நேர்காணல் தொடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.