விற்பனைக்கு வரும் ராஜஸ்தான் அணி

தினமலர்  தினமலர்
விற்பனைக்கு வரும் ராஜஸ்தான் அணி

புதுடில்லி: கடந்த 2008ல் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் 'டுவென்டி-20' தொடர் துவங்கப்பட்டது. முதல் 'சீசனில்' கோப்பை வென்ற ராஜஸ்தான் அணிக்கு சூதாட்ட சர்ச்சை காரணமாக 2016, 2017 சீசனில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் உரிமையாளராக உள்ள மனோஜ் படாலே தனது பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ராஜஸ்தான் அணி உரிமையாளர் படாலே, தன்னிடம் உள்ள சுமார் 50 சதவீத பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளார். 2016, 17 ஐ.பி.எல்., 'சீசனில்' பங்கேற்ற புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கே பங்குகளை வாங்க அதிக வாய்ப்புள்ளது,'' என்றார்.

மூலக்கதை