இந்திய விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகள் வெளியிட மத்திய அரசு உத்தரவு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 

அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிடத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார். 

பொது அறிவிப்பு வெளியாகாத விமான நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.  உள்ளூர் மொழியிலும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்ததை அடுத்து மத்திய அமைச்சகம் இம்முடிவை எடுத்து உள்ளது. 

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவின்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு  உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மூலக்கதை