கர்நாடக பேரவையில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல்

தினகரன்  தினகரன்
கர்நாடக பேரவையில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல்

பெலகாவி: கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண விதானசவுதா கட்டிடத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சி.கே.ஜாபர்ஜெரீப், அம்பரீஷ் உள்பட பலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத் ெதாடர்ந்து  அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று முதல் அவை வழக்கம்போல் நடைபெறும். மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் எல்லையோர பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக பெலகாவியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. அதன்படி இவ்வாண்டிற்கான கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது.

மூலக்கதை