நேபாளத்தில் மார்ச் 13ல் அதிபர் தேர்தல்

தினகரன்  தினகரன்

காத்மாண்டு : நேபாளத்தில் மார்ச் 13ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. நேபாளத்தில் மூன்றாவது புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி, வரும் மார்ச் மாதம் 13ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 7ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு பின்னர் அதே நாளில் பதிவான ஓட்டுகள்  எண்ணப்படும்.  அதிபராக வெற்றி பெறும் வேட்பாளர் 884 ஓட்டுகளை பெற வேண்டும். 334 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுகளையும், 550 மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டுகளையும் பெறவேண்டியது அவசியம்.

மூலக்கதை