எல்லையில் பாக். தாக்குதலுக்கு ராணுவம் பதிலடி

தினகரன்  தினகரன்

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் தாங்தர் செக்டாரில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழு (பிஏடி) படையினர் நேற்று முன்தினம் இரவு இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டதாகவும், துப்பாக்கி சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் இந்திய ராணுவம் விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த உயிர் பலி ஏதுவும் ஏற்படவில்லை.எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. அக்குழுவில் ராணுவ வீரர்களுடன், தீவிரவாதிகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை