மக்களை திசை திருப்புகிறது பா.ஜ.,: அகிலேஷ் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
மக்களை திசை திருப்புகிறது பா.ஜ.,: அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ: நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை பா.ஜ., திசை திருப்புகிறது என உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: டீ விற்பது, பகோடா விற்பது போன்ற விவகாரங்களை, பா.ஜ.,வினர் பேசுகின்றனர். இதன்மூலம், நாட்டில் நடக்கும் ஊழல், நிர்வாக சீர்கேடு, வேலையின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து, மக்களை திசை திருப்புகின்றனர். நீண்ட நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை