பாக்.குடன் பேசுவதே அவசியமானது: மெகபூபா

தினமலர்  தினமலர்
பாக்.குடன் பேசுவதே அவசியமானது: மெகபூபா

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார்.

காஷ்மீரில் காஷ்மீர்- ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். பின்னர் ராணுவத்துடன் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் காஷ்மீர் முதல்வர் மெகபூப் முப்தி கூறியது, நாட்டிற்கு எதிராக சதி செய்பவர்கள் இப்போது செய்தியாக தெரிகின்றனர். இவர்களால் காஷ்மீர் மக்கள் துன்பபடுகின்றனர். காஷ்மீரில் இனியும் ரத்த ஆறு ஒடாமல் இருக்க வேண்டுமாயின் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகிறது. ஏனெனில் போரை தேர்தெடுப்பது அவசியமில்லை இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை