என்னுடைய அரசு ஏழைகளுக்கானது: பிரதமர் மோடி

தினமலர்  தினமலர்
என்னுடைய அரசு ஏழைகளுக்கானது: பிரதமர் மோடி

வதோதரா: என்னுடைய அரசு ஏழைகளுக்கானது: அம்பானி அதானிகளுக்கானஅரசுஅல்ல என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி 93 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதனையடுத்து வதோதராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது: குஜராத் சட்டசபை தேர்தல் பா.ஜ.,வின் வளர்ச்சிக்கான அரசியலுக்கும்,காங்கிரசின் அழிவிற்கான அரசியலுக்கும் இடையே நடக்கும் போட்டியாகும்.

என்னுடைய அரசு ஏழைகளுக்கானது. அம்பானி, அதானி,டாடா போன்றோர்களுக்கான அரசு அல்ல. வதோதராவில் பஸ் நிலையம் உருவாக்கப்படும் போது டாடா, அம்பானி,அதானியா பயன்படுத்தப்பபோகின்றனர் அதனை ஏழைகளே பயன்படுத்துவர் . நாங்கள் ஏழைகளுக்காக கேஸ் கனெக்ஷனை வழங்குகிறோம். அம்பானி, அதானி,டாடா பயன்படுத்தப் போகிறார்களா. நமதுந நாட்டு ராணுவ வீர்கள் சீன எல்லைப்பகுதியில் சண்டையிட்டு கொண்டிருக்கும் போது சீன தூதுவர்கள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி பொய்களை கூறுவதை விட்டு விட்டு வளர்ச்சி குறித்து கவனம் செலுத்த வேண்டும். என கூறினார்.

மூலக்கதை