ஆம்னி பஸ் மீது கார் மோதி தீப்பற்றி எரிந்தது 2 பேர் உடல் கருகி பலி

தினகரன்  தினகரன்
ஆம்னி பஸ் மீது கார் மோதி தீப்பற்றி எரிந்தது 2 பேர் உடல் கருகி பலி

ஓசூர் : சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஓசூரை கடந்து அத்திப்பள்ளியை அடுத்த சந்தாபுரம் அருகே  சென்றபோது, பெங்களூருவில் இருந்து ஓசூர்சென்ற கார் திடீரென ஆம்னி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. சிறிது நேரத்தில் பஸ்சும், காரும் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த பயணிகள் அலறியடித்தபடி, கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்தனர். அதே நேரத்தில் காரில் பயணம் செய்த  ஓசூரைச் சேர்ந்த ஷபி(29) மற்றும் இஸ்மாயில்(28) ஆகிேயார் உடல் கருகி பலியாகினர்.

மூலக்கதை