ஜம்மு காஷ்மீரில் காவலரை கடத்தி கொன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் காவலரை கடத்தி கொன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் காவலராக பணியாற்றி வந்தவர் முகமது சலீம், இவர் விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று, அவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர், அப்பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.இந்நிலையில், இன்று காலை குல்காம் பகுதியில் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் ஆகிய படைவீரர்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை வீரர்கள் சுற்றி வளைத்தனர். பின்னரும் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கு இடையே சில மணி நேர சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மூலக்கதை