நெஞ்சுவலி காரணமாக லாலு மருத்துவமனையில் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெஞ்சுவலி காரணமாக லாலு மருத்துவமனையில் அனுமதி

பாட்னா:  நெஞ்சுவலி காரணமாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலகுறைவு காரணமாக அவருக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜாமீனில் வந்த லாலு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குறைந்த ரத்த அழுத்தம், நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக அவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இந்த மருத்துவமனையில்தான் லாலு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் லாலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாலுவின் மகன், மகள் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

 

.

மூலக்கதை