எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 5 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாத அமைப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் எல்லையில் தாக்குதலை நிறுத்திக் கொள்ளலாம் என கோரிக்கை விடுத்த பாகிஸ்தான் அதனை மீறி மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தாங்தார் எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

மூலக்கதை