மத்திய பாஜக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி ட்வீட்

தினகரன்  தினகரன்
மத்திய பாஜக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன் : பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி : கடந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது துடிப்புமிக்க மக்கள் இயக்கமாக மாறி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொண்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனையொட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவை உருமாற்றும் பணிக்கான பயணத்தை தாங்கள் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி என்பது துடிப்புமிக்க  மக்கள் இயக்கமாக மாறி இருப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பங்கு பெற்றிருப்பதாக ஒவ்வொரு பிரஜையும் உணர்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார். 125 கோடி இந்தியர்களும் இணைந்து இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு தலைவணங்குவதாகவும் இந்த அன்பும் ஆதரவுமே ஒட்டுமொத்த அரசின் வலிமை, ஊக்கத்திற்கு மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது இருப்பதாகவும் மோடி பதிவிட்டுள்ளார். அதே அர்ப்பணிப்புடன் இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய இருப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். தங்களை பொறுத்தவரை இந்தியாவுக்கே முதன்மை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் முடிவுகளை  சிறந்த நோக்கம் மற்றும் நேர்மையுடன் தாங்கள் எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

மூலக்கதை