அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு: 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு

தினமலர்  தினமலர்
அமைதி ஏற்படுத்தும் பொறுப்பு: 2 ஐ.ஏ.எஸ்.,களிடம் ஒப்படைப்பு

சென்னை : துாத்துக்குடி மாவட்டத்தில், அமைதியை நிலைநாட்ட, கண்காணிப்பு அலுவலர்களாக, இரண்டு மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துாத்துக்குடி மாவட்டத்தில், நேற்றுமுன்தினம் நடந்த, அசம்பாவித சம்பவங்களை கண்காணிக்கவும், மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவும், போக்குவரத்து துறை கூடுதல் செயலர் டேவிதார், வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி ஆகியோரை, கண்காணிப்பு அலுவலர்களாக, முதல்வர் பழனிசாமி நியமித்து உத்தரவிட்டார்.

இருவரும், நேற்று துாத்துக்குடி சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு கூடுதல், டி.ஜி.பி., விஜயகுமார், தென் மண்டல காவல் துறைத் தலைவர் சைலேஷ் யாதவ், கலெக்டர் வெங்கடேஷ், எஸ்.பி., மகேந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன், ஆய்வுக்கூட்டம் நடத்தி, உரிய அறிவுரைகளை வழங்கினர்.

பின், ககன்தீப்சிங் பேடி, துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து, ஆறுதல் கூறினார். மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின்ஜோ , தென் மண்டல, டி.ஐ.ஜி., பிரதீப்யாதவ் மற்றும் அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார். மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ள, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும்படி உத்தரவிட்டார்.

மூலக்கதை