ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: காஷ்மீர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுமிகள் பலாத்கார விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 2006ம் ஆண்டு 18,967 என இருந்த மேற்படி குற்ற செயல்கள், கடந்த 2016ல் 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 ஆக உயர்ந்து இருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி நாட்டின் ஒட்டுமொத்த குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவானவை ஆகும்.



ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகிறாா்.

இதைப்போல குழந்தைகளுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த பாலியல் குற்றங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் பதிவாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

.

மூலக்கதை