ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்

தினமலர்  தினமலர்
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்

புதுடில்லி: வாபஸ் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை விட திருப்பதி கோவில் பணியாளர்கள் வேகமாக செயல்படுவர் என காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த காங்., கட்சியின் 84வது மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு என்பது, மிகப் பெரிய பொய். இவ்வளவு நாளாகியும், செல்லாத ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி இன்னும் எண்ணி முடிக்கவில்லை என்று கூறுகின்றனர். ரிசர்வ் வங்கி கவர்னர், திருப்பதிக்குச் சென்று, அங்கு உண்டியலில் சேரும் பணத்தை எண்ணுபவர்களை அழைத்து வரலாம். அவர்கள் மிக வேகமாக எண்ணிவிடுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை