சிறையில் லாலுவுக்கு உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

தினமலர்  தினமலர்
சிறையில் லாலுவுக்கு உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் லாலுவுக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பீஹார் மாநிலத்துடன், ஜார்க்கண்ட் மாநிலம் இணைந்திருந்தபோது, மாட்டுத் தீவன கொள்முதலில் ஊழல் செய்ததாக, அப்போதைய பீஹார் முதல்வர், லாலு பிரசாத் யாதவ்,69 மீது, ஆறு வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகளை, ஜார்க்கண்ட் மாநில சிறப்பு, சி.பி.ஐ., நீதிமன்றம் விசாரித்து வருகிறது.இதில், மூன்றாவது வழக்கில் கடந்தஆண்டு டிசம்பரில், தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, பிர்சா முண்டா மத்திய சிறையில் லாலு அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று இரவு லாலுவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை