சசிகலாவின் மறுசீராய்வு மனு மீது இன்று விசாரணை

PARIS TAMIL  PARIS TAMIL
சசிகலாவின் மறுசீராய்வு மனு மீது இன்று விசாரணை

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நரிமன் விசாரிக்க சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால், சசிகலாவின் மறு ஆய்வு மனு அன்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த நிலையில், சசிகலாவின் மறுசீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.ரோஹின்டன் நாரிமனுக்கு மாற்றாக நீதிபதி பாப்டே விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப் படே, அமிதவராய் அமர்வு விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை