பீகார், உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஆக உயர்வு

தினகரன்  தினகரன்

லக்னோ: பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து வருகின்றனர்.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பீகாரில் இதுவரை 130 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு படையினர் கூறுகையில், பீகாரில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 130 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 11 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். மேலும் 18 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், உத்தரப்பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மழையால் பாதிப்பு அடைந்தவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

மூலக்கதை