நடிகை கடத்தல் வழக்கு நடிகர் திலீப் ஜாமீன் மனு 22க்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம் : கேரளாவில் நடிகை கடத்தல் வழக்கில் கைதான திலீப் 3வது முறையாக ஜாமீன் ேகாரி கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுதாக்கல் செய்தார். இது  நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு  வக்கீல், ‘‘வழக்கு சம்பந்தமாக மேலும் ஆவணங்களை திரட்ட கூடுதல் அவகாசம்  வேண்டும்’’ என்று கேட்டார். இதையடுத்து, விசாரணையை 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதற்கிடையே, நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து எம்எல்ஏ பிசி. ஜார்ஜ் சில அவதூறு கருத்துகளை தெரிவித்தார். இதற்கு மகளிர்   அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பி.சி.ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள மகளிர் ஆணையம், அவரிடம் விசாரணை  நடத்த சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளது. கடத்தப்பட்ட நடிகையிடம் கேரள மகளிர் ஆணைய  தலைவி ஜோசப்பின் நேற்று விசாரணை நடத்தினார்.

மூலக்கதை