'பரூக் நாக்கை துண்டித்தால் ரூ.21 லட்சம் பரிசு'

தினமலர்  தினமலர்
பரூக் நாக்கை துண்டித்தால் ரூ.21 லட்சம் பரிசு

ஸ்ரீநகர்: 'ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லாவின் நாக்கை துண்டிப்பவருக்கு, 21 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்' என, பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

பாக்., ஆதரவாக..

ஜம்மு - காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா, 'பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர், பாக்.,கிற்கே சொந்தம்' என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, 'பாக்., வலிமையற்ற நாடு அல்ல. தன் ஆதிக்கத்தில் உள்ள காஷ்மீர் பகுதியை, இந்தியா எடுத்துக் கொள்வதை அனுமதிக்க, அந்நாடு, வளையல் அணிந்திருக்கவில்லை' என, மற்றொரு கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் தலைவர், விரேஷ் ஷண்டில்யா கூறியுள்ளதாவது: பரூக் அப்துல்லாவின் சமீபத்திய கருத்துக்கள், இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் உள்ளன. பரூக் அப்துல்லா, தேசத் துரோகி. அவரது நாக்கை துண்டிப்பவருக்கு, 21 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை