டெல்லி அருகே பாஜ பிரமுகர் சுட்டுக் கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி அருகே பாஜ பிரமுகர் சுட்டுக் கொலை

நொய்டா: நொய்டாவில், பா. ஜ. , பிரமுகரும், அவரது கார் டிரைவரும், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேசத்தில், பா. ஜ. வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் டெல்லி அருகே உள்ள புறநகராக நொய்டாவில், பா. ஜ. , பிரமுகரும், முன்னாள் கிராம தலைவருமான, சிவகுமார், நேற்று, காரில் சென்று கொண்டு இருந்தார். அவரது வாகனத்தை, டிரைவர் ஓட்டிச் சென்றார்.

சிவகுமாருடன், அவரது பாதுகாவலரும் பயணித்தார். சாலையில் சென்று கொண்டிருந்த சிவகுமாரின் வாகனத்தை, வேறொரு வாகனம் திடீரென முந்தி செல்ல முற்பட்டது.



இதையடுத்து, கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நேரத்தில், சிவகுமார், அவரது டிரைவர், பாதுகாவலரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சிவகுமார் மற்றும் அவரின் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த பாதுகாவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜ பிரமுகர் கொலைக்கு அரசியல் காரணமா அல்லது சொந்த பகை காரணமா என்பது உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை