குஜராத் தேர்தலுக்காக ஜிஎஸ்டி வரிகுறைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குஜராத் தேர்தலுக்காக ஜிஎஸ்டி வரிகுறைப்பு

மும்பை: குஜராத் தேர்தலில் படுதோல்வியை தவிர்க்கவே சில பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை பா. ஜ. , குறைத்துள்ளது என அதன் கூட்டணி கட்சியான சிவசேனா விமர்சித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜூலை 1 முதல் சரக்கு ேசவை வரி எனப்படும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது.

இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த ஜி. எஸ். டி. , கவுன்சில் கூட்டத்தில் 178 பொருட்கள் மீதான வரி, 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதற்கு பாராட்டுக்களுடன் விமர்சனங்களும் அதிகளவில் எழுந்தன. பா. ஜ. ,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் பா. ஜ. ,வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனாவும் மத்திய அரசை விமர்சித்து, அக்கட்சியின் நாளேடான சாம்னா’வில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: அரசியல் ஆதாயம், சுய விளம்பரத்தை பெறுவதில் பா. ஜ. , குறியாக உள்ளது.

குஜராத் தேர்தலை மனதில் வைத்தே ஜி. எஸ். டி. , வரி குறைப்பை பா. ஜ. , செய்துள்ளது. தேர்தலில் படுதோல்வியை தவிர்க்கவே பா. ஜ. , இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

ஜி. எஸ். டி. , வரியில் சமரசத்துக்கு இடமில்லை என தெரிவித்தவர்கள், தற்போது எதற்காக வளைந்து கொடுக்கிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜிஎஸ்டி வரிகுறைப்பை அரசியலாக்குவது சிறுபிள்ளைதனமானது என மத்திய நிதி அமைச்சர் அரண் ஜெட்லி பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் ஜிஎஸ்டியில் ஒற்றை வரி சாத்தியமில்லை எனவும் கூறியுள்ளார்.


.

மூலக்கதை