கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: இந்த வருடத்தில் இது இரண்டாவது முறை!

தினகரன்  தினகரன்

கேதார்நாத்: பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு இன்று சென்ற மோடி அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குளிர்காலம் வருவதை முன்னிட்டு கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்கான நுழைவாயில் நாளையுடன் மூடப்பட இருப்பதால் இன்று மோடி தரிசனம் செய்தார். இதன்பின் கேதார்நாத் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் அங்கு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து உரையாற்ற இருக்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி கேதார்நாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே பிரதமர் மோடி கேதார்நாத் செல்வது இந்த வருடத்தில் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக பிரதமர் மோடி காஷ்மீருக்கு அருகில் உள்ள குரஸ் செக்டாரில் இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் நேற்று தீபாவளி கொண்டாடினார். ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

மூலக்கதை