வரும் 24ல் லக்னோ நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் பயிற்சி

தினமலர்  தினமலர்
வரும் 24ல் லக்னோ நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் பயிற்சி

லக்னோ: வரும் 24ம் தேதி(அக்., 24) ஜெட் போர் விமானங்கள், லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

உ.பி.,யில் கடந்த 2016 நவம்பரில், ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வே, போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. துவக்க விழாவில், எட்டு போர் விமானங்கள் தரையிறங்கின. அவசர காலங்களில், போர் விமானங்களை தரையிறக்கவும், புறப்படவும், இந்த எக்ஸ்பிரஸ் வே-யை பயன்படுத்த விமானப் படை திட்டமிட்டுள்ளது. அதன்படி, 24ம் தேதி, இந்திய விமானப்படையின், 20 ஜெட் போர் விமானங்கள், இந்த நெடுஞ்சாலையில் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

இது குறித்து, ராணுவஅமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி, கார்கி மாலிக் கூறியதாவது: இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின், 20 விமானங்கள், போர் மற்றும் போக்குவரத்து விமானங்கள் பங்கேற்கின்றன. பகல் நேரத்தில், போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுவதால், இன்று முதல், 24ம் தேதி வரை, எக்ஸ்பிரஸ் வேயில், மற்ற வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை