சுஷ்மா உத்தரவு: பாக்., சிறுமிக்கு, 'விசா'

தினமலர்  தினமலர்
சுஷ்மா உத்தரவு: பாக்., சிறுமிக்கு, விசா

புதுடில்லி: கண் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள, பாகிஸ்தானைச் சேர்ந்த, 5 வயது சிறுமிக்கு, இந்தியாவில் சிகிச்சை பெற, 'விசா' வழங்க, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த, அனம்தா பரூக், கண் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்தியாவில் சிகிச்சையளிக்க, பெற்றோர் முடிவு செய்தனர். மகளின் நிலைமையை கூறி, விசா வழங்கும்படி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜுக்கு, சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று, சிறுமிக்கு விசா வழங்கும்படி, பாகிஸ்தானின், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதரகத்துக்கு, சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பெற, பாக்.,கை சேர்ந்த மற்றொரு குழந்தைக்கும், விசா வழங்க, சுஷ்மா உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை