ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்: நிதின் கட்காரி

தினகரன்  தினகரன்

மும்பை: அனைத்து பிரச்சனைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் மூலம் தீர்வுகாண முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருக்கிறார். மும்பையில் ஆர்.எஸ்.எஸ். குறித்த நூல் வெளியிட்டு விழாவில் பேசிய அவர் சமூக பொருளாதார சமத்துவம், தேசியவாதம் ஆகியவற்றை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் பிரதிபலிப்பதாக கூறினார். சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் ஆர்.எஸ்.எஸ். சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளது என்று கூறிய அவர் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அது திகழ்கிறது என்றார். மார்க்சியம், பொதுவுடமை, சித்தாந்தங்கள் தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்த அவர் ஆர்.எஸ்.எஸ். மாதிரியான சமூக பொருளாதார வளர்ச்சி உலகிக்கே வழிகாட்டியாக உள்ளது என்று கூறினார். ஆர்.எஸ்.எஸ். மீது எதிர்மறையான பிரச்சாரம் செய்யப்பட்ட போதிலும் அதனுடைய ஈடுபாடு மற்றும் செயல்பாடு காரணமாக இது இன்னும் நிலைத்து நிற்கிறது என்று கட்காரி தெரிவித்தார். கல்வி, சுகாதாரம். ஆளுமை, மேம்பாடு, நாட்டுக்காக புரிந்த சேவை ஆகிய ஆர்.எஸ்.எஸ்.சின் சிறந்த அம்சங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கட்காரி கேட்டுக்கொண்டுள்ளார். 

மூலக்கதை