அ.தி.மு.க., அணிகள் ரகசிய பேச்சு

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க., அணிகள் ரகசிய பேச்சு

அ.தி.மு.க.,வின் இரு அணி நிர்வாகிகளும், ரகசிய பேச்சில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பன்னீர் அணி சார்பில் பேச்சு நடத்த, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில், குழு அமைக்கப்பட்டது. சசிகலா அணி சார்பில் முன்னாள் அமைச்சர், வைத்திலிங்கம் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. ஆனால் இரு தரப்பினரும் கூறிய கருத்துகளால், பேச்சு துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து முதலில் ரகசியமாக பேச்சு நடத்துவது; அதில் உடன்பாடு ஏற்பட்ட பின், அதிகாரப்பூர்வ பேச்சு நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன் தினம்(ஏப்.,25) இரவு, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரகசிய பேச்சு நடந்துள்ளது. பன்னீர் அணி சார்பில் முனுசாமி, விஸ்வநாதன்; சசிகலா அணி சார்பில் வைத்திலிங்கம், செங்கோட்டையன் பங்கேற்றுள்ளனர். நேற்றும் பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

மூலக்கதை