பணியின்போது இறக்கும் துணை ராணுவத்தினருக்கும் தியாகிகள் அந்தஸ்து

தினகரன்  தினகரன்

மக்களவையில் கேள்வி நேரத்தில் நேற்று பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர் கூறியதாவது: காவல்துறை  நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நாட்டின் பல இடங்களுக்கு சட்ட ஒழுங்கு பணியை பாதுகாக்க அனுப்பப்படும் துணை ராணுவத்தினருக்கு  குண்டு துளைக்காத ஜாக்கெட் உட்பட பாதுகாப்பு கவசங்கள், நவீன ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. 2017 மார்ச் 21ம் தேதி வரை 3,436 வீரர்கள்  காயம் அடைந்துள்ளனர். பணியின்போது இறக்கும் துணை ராணுவத்தினரும் தியாகிகளாகவே கருதப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை