அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: 3 மாத ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: 3 மாத ...

மும்பையின் புறநகர் பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  


    மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியான கட்கோபாரின் தாமோதர் பூங்கா பகுதியில் 4 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.
  இந்த விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.  
  இந்தக் கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது என்று பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டிட விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

.

மூலக்கதை