குப்பை பொறுக்கியவர் மின்சாரம் பாய்ந்து பலி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ஜஹாங்கீர் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலுள்ள குப்பை பொறுக்குவோரின் காலனியில் வசித்து வந்தவர் அக்பர்(27). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், மழையில் நனைந்தபடி அப்பகுதியில் குப்பை தேங்கியிருந்த குப்பைகளை கிளறிக்கொண்டிருநதார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்ப வயரை கவனக்குறைவால் மிதித்தார். இதில் தூக்கி வீசப்பட்டு மூச்சற்று கிடந்தார். அங்கு வந்த அவரது நண்பர்கள் அவரை எழுப்பியபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால், ‘மின்கம்பத்திலிருந்த மெயின் வயரில் எந்த துண்டிப்பும் ஏற்படவில்லை என்றும்,  இ- ரிக்‌ஷாக்காரர்கள் வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு அனுமதி பெறாமல் மின்திருட பயன்படுத்தும் அறுந்து கிடந்த வயரை மிதித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது’ என டாடா பவர் டெல்லி செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மூலக்கதை