இன்ஜினில் கோளாறு முதல்வர் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்: குஜராத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்ஜினில் கோளாறு முதல்வர் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்: குஜராத்தில் பரபரப்பு

அகமதாபாத்: முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் உள்ள உமர்காம் என்ற இடத்தில் இருந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் விஜய் ரூபானி ஹிம்மத்நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹெலிகாப்டரின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்த ஹெலிகாப்டரை பைலட் மிகவும் சாமர்த்தியமாக அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.

இதனால் விஜய் ரூபானி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் இன்ஜின் சூடாகி திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டதால் முதல்வர் தப்பினார் என தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போல் மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் கோளாறாகி லத்தூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதன் மூலம் விபத்தில் இருந்து அவர் தப்பினார்.

முதல்வர் விஜய்  ரூபானி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை