சிரியாவில் தொடர் குண்டுவெடிப்பு: 18 பேர் சாவு

தினமணி  தினமணி

சிரியாவில் அடுத்தடுத்து பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியானார்கள்.

சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ், கடற்கரை நகரான டார்டஸ், மத்திய நகர்பகுதியான ஹோம்ஸ் மற்றும் வடகிழக்கு நகரான ஹஸ்ஸாக் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தாக்குதலில் 18 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாதல் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சிரியாவில் அரசு மற்றும் ராணுவ மையங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மூலக்கதை