காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
ஸ்ரீநகர், காஷ்மீரில் கடந்த 23-ந் தேதி புதிதாக பனிப்பொழிவு தொடங்கியது. அதனால் 270 கி.மீ. நீளம் கொண்ட ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, பனியால் மூடியது. நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. நெடுஞ்சாலை மூடப்பட்டது. அதேபோல, விமான நிலையத்திலும் பனி நிரம்பியுள்ளது. இந்த நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகருக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. "ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நிலவும் மோசமான வானிலை மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக, பெரும்பாலான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன" என்று விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வார விடுமுறை மற்றும் குடியரசு தினத்தையொட்டி, காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். தற்போது விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால், அவர்கள் அவதியடைந்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
