காஷ்மீரில் அமைதி திரும்பும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்று தான் நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர், பலதரப்பட்ட கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீர் சென்றுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிரிவினைவாதிகள் அழைக்கப்பட்ட போதும், அவர்கள் அதனை நிராகரித்துவிட்டனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஹுரியத் தலைவர்கள் காஷ்மீரத்தைத் தான் விரும்புகிறார்களே தவிர, மனித நேயத்தை அல்ல.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையை தவிர்த்திருப்பதன் மூலம், அவர்கள் ஜனநாயகத்தை நம்பவில்லை என்பது தெரிகிறது.
காஷ்மீர் இந்தியவின் ஒரு பகுதி என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியாகவே காஷ்மீர் தொடர்ந்து இருக்கும். காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்ப மத்திய அரசு, மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் ராஜ்நாத் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
