ரெயில்வே பணிமனையில் இருந்து வந்த போது தடம் புரண்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ்
சென்னை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ரெயில்வே பணிமனையில் இருந்து நேற்று மாலை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர் ரெயில்நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது. இதைத்தொடர்ந்து, உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தடம் புரண்ட பெட்டிகள் சிறிது நேரத்திலேயே சரி செய்யப்பட்டு, பாதுகாப்பாக மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டன. இதையடுத்து, அந்த ரெயில் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்றது. தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
