தனியார் இணையதளங்கள் மூலம் பஞ்சாமிர்தம் விற்கப்படுவதில்லை - பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்பு கோவில் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், அடிவாரம், பழனி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள் உள்ளன. மேலும் கோவில் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு தபால் வழியாக பஞ்சாமிர்தம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தக இணைய தளத்தில் பழனி கோவில் பஞ்சாமிர்தம் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து தற்போது கோவில் நிர்வாகம் சார்பில், அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தனியார் இணையதளங்கள் வாயிலாக பஞ்சாமிர்தம் விற்கப்படுவதில்லை. எனவே கூடுதல் தொகை கொடுத்து ஏமாற வேண்டாம். கோவில் விற்பனை நிலையத்தில் நேரடியாக பக்தர்கள் வாங்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
