ஒடிசா: சட்டவிரோத கல்குவாரியில் உடைந்து விழுந்த பாறைகள்; பலர் பலி என அச்சம்
புவனேஸ்வர், ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கோபால்பூர் கிராமம் அருகே மோதங்கா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் துளை போட்டு கற்களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பாறைகளின் பெரிய பகுதி உடைந்து, விழுந்தது. அது நொறுங்கி பரவி கிடந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதல்கட்ட தகவலின்படி 2 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், உள்ளூர் தீயணைப்பு படையினரின் மீட்பு குழுக்கள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளன. ஒடிசாவின் பேரிடர் மீட்பு படை, மோப்ப நாய் குழு ஒன்றும் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இரவில் மீட்பு பணியை மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டது. தொழிலாளர்களை தேடி கண்டுபிடிப்பதில் சிக்கல் காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது சட்டவிரோத கல்குவாரி என கூறப்படுகிறது. வெடி வைப்பதற்கான முறையான முன் அனுமதி இல்லை என கூறி இதனை மூடும்படி தேன்கனல் மாவட்ட சுரங்க அலுவலகம் நோட்டீஸ் ஒன்றை முன்பே அனுப்பி விட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அதன்பின்னரும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் நடந்துள்ளன என கூறப்படுகிறது. #WATCH | Dhenkanal, Odisha: Massive explosion at stone quarry, labourers trapped. pic.twitter.com/v9snDuvaoR




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: செல்வப்பெருந்தகை
அநீதி ஆட்சியாளர்களை விரட்டுவதற்கான துணிச்சலை வீரமங்கை வழங்கட்டும்: அன்புமணி புகழாரம்
உதகை மலை ரெயில் சேவை 2-வது நாளாக ரத்து
மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
