திருவாரூர்: வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என ஏமாற்றி பெண்ணிடம் ரூ.14 லட்சம் மோசடி
திருவாரூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பீர் முகமது வெள்ளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், அவரது மனைவியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து, வீட்டில் இருந்தே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேலைவாய்ப்பு உள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, முதலில் 2 லட்சம் ரூபாய் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அதிக பணத்தை முதலீடு செய்தால், பல மடங்கு அதிக வருமானம் கிடைக்கும் என உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனை நம்பி அந்த பெண் மொத்தமாக 14 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் எதிர்பார்த்தது போல் அவருக்கு வருமானம் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
