கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கோவில் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குக - மு.வீரபாண்டியன்
சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானம் என்ற ஊரில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் இருக்கிறது. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், அதே ஊரைச் சேர்ந்த சங்கர பாண்டியன் (65) அருகில் உள்ள கோவிலூர் பேச்சிமுத்து (50) ஆகியோர் காவலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (10.11.2025) வழக்கம் போல இரவுப் பணியில் இருந்துள்ளனர். வழக்கம் போல 11.11.2025 ஆம் தேதி காலையில் கோவில் திறந்து பார்த்த போது, இரவுக் காவலர்கள் இருவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் உடைத்து அகற்றப்பட்டு, கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட செய்தி தெரியவந்தது. ராஜபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடித்து, கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருவர் சுட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட இரண்டு காவலர் குடும்பங்களும் மிக வறிய நிலையில் உள்ள குடும்பங்கள் என்பதை கருத்தில் கொண்டு, அந்தக் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கி உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
