புதிய உச்சத்தில் தங்கம் விலை.. மீண்டும் சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது

  தினத்தந்தி
புதிய உச்சத்தில் தங்கம் விலை.. மீண்டும் சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 16-ந்தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் பிறகும் விலை உயருமோ என நினைத்த நேரத்தில், கடந்த சில நாட்களாக சற்று குறைந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.82 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ,82,320-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.143-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.145-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 20.09.2025 ஒரு சவரன் ரூ.82,320 (இன்று) 19.09.2025 ஒரு சவரன் ரூ.81,840 (நேற்று) 18.09.2025 ஒரு சவரன் ரூ.81,760 17.09.2025 ஒரு சவரன் ரூ,82,160 16.09.2025 ஒரு சவரன் ரூ,82,240 15.09.2025 ஒரு சவரன் ரூ,81,680

மூலக்கதை