தங்கம் விலை சவரன் மீண்டும் ரூ.80 ஆயிரத்தை கடந்தது

சென்னை, தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந்தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அதிலும் கடந்த மாதம் 29-ந்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்தது. அந்த வகையில் கடந்த 4-ந்தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன் தினம் இதுவரை இல்லாத வகையில், வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன் தினம் ஒரு சவரன் ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.10,005-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.5 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இந்த நிலையில், இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து சவரனுக்கு ரூ. 280 குறைந்து, ஒரு சவரன் ரூ.79,760-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.137க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் காலையில் குறைந்த தங்கம் விலை, திடீரென மாலையில் சற்று எகிறியது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,060க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.80,480க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.280 குறைந்திருந்தநிலையில் தற்போது ஒரு சவரன் ரூ.720 உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ரூ.3 குறைந்து கிராம் ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மூலக்கதை
