நெல்லையில் பாட்டியை தாக்கிய பேரன் கைது
திருநெல்வேலி மாநகரம், சந்திப்பு காவல் சரகம், செல்வி நகரில் தேவஆசீர்வாதம் மனைவி மேரிசெல்வபாய் என்பவர் வசித்து வருகிறார். அவர் நேற்று (16.04.2025) தனது பேரனுடன் தனது வீட்டில் இருந்த பொழுது, யாரோ மர்ம நபர் மேரிசெல்வபாயை தாக்கிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை திருடி சென்றதாக கூறப்பட்டது. மேற்சொன்ன சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த சம்பவத்தில் காயம்பட்ட பெண்மணி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். மேலும் காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க செயின் அந்த பெண்ணின் வீட்டிற்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மேற்சொன்ன சம்பவத்தில் பாட்டியுடன் வீட்டில் இருந்த பெரியசாமி மகனும், மேரிசெல்வபாயின் பேரனுமான சரண்பிரபு (வயது 21), தனது பாட்டியை தாக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சரண்பிரபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
