பெப்சி புதிய நிர்வாகிகள் தேர்தல் புதிய தலைவர் யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெப்சி புதிய நிர்வாகிகள் தேர்தல் புதிய தலைவர் யார்?

சென்னை- தென்னிந்திய திரைப்பட சம்மேளனம் (பெப்சி) புதிய நிர்வாகிகள் தேர்தல் இன்று நடக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று தேர்தலை நடத்தி வைக்கிறார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் இயக்குனர் ஆர். கே. செல்வமணி தலைமையில் சம்மேளன முன்னணி, அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் தலைமையில் உரிமை மீட்பு அணி என இரண்டு அணிகள் மோதுகின்றன. பொதுச் செயலாளர் பதவிக்கு யார் கண்ணன், ஏ. சண்முகம், பொருளாளர் பதவிக்கு வி. ராமன், பி. என். சுவாமிநாதன், துணை தலைவர்கள் பதவிக்கு ஏ. சம்பத், எஸ். ஆர். சந்திரன், மூர்த்தி, ஜீவா, ஸ்ரீபிரியா, ஜனார்த்தனன், ஷோபி பவுன்ராஜ், ஸ்ரீதர், இணை செயலாளர் பதவிக்கு கே. ஆர். செல்வராஜ், ஆர். தனபால், ஏ. சபரி கிரிசன், ராஜா, கே. ரமணபாபு, ராதாகிருஷ்ணன், பி. ரமணபாபு, செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 சங்க நிர்வாகிகள் 69 பேர் ஓட்டு போடுகின்றனர். இன்று காலை ஓட்டு பதிவு தொடங்கியது.

மாலை 5 மணிக்கு ஓட்டு பதிவு முடிந்து பின்னர் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

.

மூலக்கதை