எம்எல்ஏக்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு தமிழகத்தில் 3 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி தேவை - வக்கீல் ஆச்சார்யா வலியுறுத்தல்
புதுடெல்லி- தமிழகத்தில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக நடமாடவும், இயல்பு நிலை திரும்பவும் வேண்டுமானால் குறைந்தது 3 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வக்கீல் ஆச்சார்யா கூறியுள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து கர்நாடக அரசு வக்கீல் பி. வி. ஆச்சார்யா, நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டுமானால் குறைந்த பட்சம் 3 மாதங்களுக்காவது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்.
அப்போதுதான் எம்எல்ஏக்கள் அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு ஏற்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
.