தேர்வில் முறைகேட்டை தடுக்க மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு: பிகார் அரசு முடிவு
தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பது, தேர்வு தொடர்பான ஆவணங்களை எளிதில் பெறுவது உள்ளிட்ட நோக்கத்துக்காக, மாணவர்களின் தேர்வு படிவங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க பிகார் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், நாட்டிலேயே மாணவர்களின் தேர்வு நடைமுறைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை பிகார் பெறுகிறது.
இதுகுறித்து பிகார் மாநில பள்ளிக்கல்வி தேர்வு வாரியத் (பிஎஸ்இபி) தலைவர் ஆனந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தேர்வு படிவங்களை (ஃபார்ம்) மாணவர்கள் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, தங்களிடம் ஆதார் எண் உள்ளதா? இல்லையா? என்பதை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இருக்கும்பட்சத்தில், அதை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாதபட்சத்தில், அதற்காக மாணவர்கள் விண்ணப்பித்துப் பெறலாம். அப்படி செய்தால், ஆதார் எண்ணை குறிப்பிடும் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன், இவர்களுக்கும் கிடைக்கும். இந்த நடைமுறை, வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மறுதேர்வில் இருந்து அமல்படுத்தப்படுகிறது என்றார் ஆனந்த் கிஷோர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
