காஷ்மீரில் மீண்டும் பதற்றம்: சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் மினி தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் தீவைத்ததால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி, காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து வானியின் ஆதரவாளர்களும், அப்பகுதி இளைஞர்களும் அவ்வப்போது வன்முறை மிகுந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் பாதுகாப்பு கருதி பதற்றம் நிறைந்த பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இயல்பு நிலை திரும்பியிருந்ததால், ஊரடங்கு உத்தரவு அண்மையில் திரும்பப் பெறப்பட்டது. எனினும், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஏதேனும் மோதல் சம்பவங்கள் நடைபெறலாம் என்பதை கருத்தில் கொண்டு புல்வாமா, குல்காம், ஷோபியான், பாராமுல்லா மற்றும் பத்தன் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஷோபியான் மாவட்டம், பெஞ்சூரா கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டனப் பேரணி நடத்த முயற்சி செய்தபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது மினி தலைமைச் செயலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டோரை போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் சிலர் காயமடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் வந்திருக்கும் நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பிடிபி எம்எல்ஏ-வின் வீடு மீது தாக்குதல்: தெற்கு காஷ்மீரின் திரால் தொகுதி எம்எல்ஏ முஷ்டாக் அகமது ஷாவின் வீட்டின் மீது போராட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
திரால் தொகுதியில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. அப்போது எம்எல்ஏ முஷ்டாக் அகமது ஷாவின் வீட்டின் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் அவரது வீட்டு ஜன்னல்கள் உடைந்தன.
இதைத் தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு போராட்டக்காரர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். பாதுகாப்பு கருதி எம்எல்ஏவின் வீட்டு அருகே பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
