கருணை, இரக்கம், அன்பின் மறு உருவம் அன்னை தெரஸா: சோனியா காந்தி
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கருணை, இரக்கம் மற்றும் அன்பின் மறுஉருவம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
அன்னை தெரஸா, கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு சுமார் 45 ஆண்டுகள் சகிப்புத்தன்மையுடன் சேவை புரிந்தார். அவர் 1997-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் காலமானார்.
தனது இறப்புக்குப் பின், சாவின் விளிம்பில் இருந்த இருவருக்கு நோய் இருந்த சுவடே தெரியாத அளவுக்கு அவர்களை உயிருடன் மீட்டு தெரஸா அற்புதங்களை நிகழ்த்தியமைக்காக கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய போப் ஜான் பால் அருளாளர் பட்டத்தை (புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதல்படி) அறிவித்தார். இதைத் தொடர்ந்து தெரஸாவுக்குப் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று தற்போதைய போப் பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ரோமில் உள்ள வாடிகனில் அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், "இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு, ஏழைகளுக்கு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு அன்னை தெரஸா ஆற்றிய சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இந்த புனிதர் பட்டத்தைக் கருத வேண்டும். கருணை, இரக்கம் மற்றும் அன்பு ஆகியவற்றின் மறு உருவமாகத் திகழ்ந்தவர் அன்னை தெரஸா. மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டிக்கு எனது வாழ்த்துக்கள். அனைத்து இந்தியர்களும் பெருமைப்படக் கூடிய நேரம் இதுவாகும் என்று சோனியா தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
